குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை – மாநில முதல்வர் அறிவிப்பு!!
மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக ரூபாய் 1 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
கொரோனா நிவாரணத் தொகை:
கொரோனா நோய்த்தொற்று நாடு முழுவதும் கடந்த வருடம் முதல் பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. அரசுகள் நோய் பரவலை கட்டுப்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. சுகாதாரத்துறை பல அறிவுரைகளை அரசிற்கு வழங்கி வருகிறது . அதன்படி அரசு தடுப்பு பணிகளை செய்து உள்ளது.
தமிழகத்தில் இலவச பயண பேருந்துகளின் நிறம் மாற்றம் – அரசு ஆலோசனை!!
மேலும் ஊரடங்குகளை அமல்படுத்தி வருகின்றனர். இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். ஊரடங்கு காலத்தில் யாருக்கும் வேலை அளிக்காததால் சிரமப்பட்டு வருகின்றனர். அரசுகள் மக்களுக்கு தொடர்ந்து கொரோனா நிவாரண உதவிகளை செய்து வருகிறது. இந்த உயிர்க்கொல்லி நோயால் பலரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து வருகின்றனர். இதனால் மத்திய பிரதேசத்தில் மக்களுக்கு கொரோனா நிவாரணங்களை அரசு வழங்கி வருகிறது. இதுவரை மத்தியப்பிரதேசத்தில் 3,500 பேர் உயிரிழந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
முன்னதாக கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். மேலும் இலவச கல்வி, இலவச குடும்ப அட்டை, வட்டியில்லா கடன் தரப்படும் என்றும் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது கொரோனா இரண்டாவது அலையில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.