தமிழகத்தை தாக்க வரும் அடுத்த புயல் – 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!!

0
தமிழகத்தை தாக்க வரும் அடுத்த புயல் - 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!!

தமிழகத்தில் தற்போது மழைக் காலம் போல தினமும் மழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று முன்னதாக அறிவிப்பும் வெளியானது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அந்த அறிவிப்பில், இந்த சின்னம் இன்னும் 3 வங்க தேசத்தை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நகர உள்ளது. இதனால் புயல் உருவாகி கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யவும் வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வு 2024 – இந்திய விடுதலை இயக்கத்தின் முக்கிய கேள்விகள்!!

தமிழகத்தை பொறுத்தவரை வரும் வெள்ளி வரை தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி வரை கனமழை முதல் அதிகனமழை பெய்யும். தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளி முதல் சனிக்கிழமை (மே 25-27) வரை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்த வரை அதிகபட்சமாக மிதமான மழை பெய்ய வாயப்புள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!