தமிழ்நாட்டில் கடந்த 18 நாட்களில் மட்டும் 136 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சல்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல் போன்ற வைரஸ் நோய்களும் அதிகமாக பரவி வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் மற்றும் மற்ற அறிகுறிகள் உள்ளவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
இந்த ஆண்டில் ஜனவரி முதல் தற்போது வரை 4,000-க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் தமிழ்நாட்டில் பதிவாகி உள்ளது. தேனி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, கோவை, தஞ்சை ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 18 நாட்களில் மட்டும் 136 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Join Our WhatsApp Channel ” for the Latest Updates
TNPSC குரூப் 4 கணிதம் – முக்கிய கேள்விகள் மற்றும் விடைகள்!!