தமிழகத்தில் இன்னும் 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை – வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியதன் விளைவாக பெரும்பான்மையான மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கணினி தேர்வு தேர்ச்சி சான்றிதழ் குறித்து முக்கிய அறிவிப்பு – வலுக்கும் கோரிக்கை!
இதனால் தமிழகத்தில் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளது. அதன்படி இன்று செங்கல்பட்டு, சென்னை, கோவை, காஞ்சி, தேனி, திருப்பூர், நெல்லை, தென்காசி, கடலூர், குமரி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.