![முல்லைக்கு வளைகாப்பு நடத்தும் குடும்பத்தினர்.. மீண்டும் பிரச்சனை செய்யும் ஐஸ்வர்யா - முல்லைக்கு வளைகாப்பு நடத்தும் குடும்பத்தினர்.. மீண்டும் பிரச்சனை செய்யும் ஐஸ்வர்யா -](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/04/முல்லைக்கு-வளைகாப்பு-நடத்தும்-குடும்பத்தினர்.jpg)
முல்லைக்கு வளைகாப்பு நடத்தும் குடும்பத்தினர்.. மீண்டும் பிரச்சனை செய்யும் ஐஸ்வர்யா – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லைக்கு வளைகாப்பு நடத்த குடும்பத்தினர் திட்டமிட அதில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வர இருக்கிறது. அதாவது ஐஸ்வர்யாவை விட்டு முல்லைக்கு வளைகாப்பு நடத்துவதால் அவர் பெரிய பிரச்சனை செய்ய இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல திருப்பங்கள் வர இருக்கிறது. அதாவது முல்லைக்கு வளைகாப்பு நடத்த குடும்பத்தினர் திட்டமிடும் நிலையில், முல்லைக்கு எல்லா செலவுகளையும் நாங்க பார்க்கிறோம் என மூர்த்தி சொல்கிறார். ஆனால் முல்லை அம்மா அப்பா அதெல்லாம் வேண்டாம் என சொல்ல, இருவருக்கும் இடையே வாக்குவாதம் வருகிறது. இதற்கிடையே முல்லை வளைகாப்பிற்கு ஜீவாவை அழைக்க கதிரும் தனமும் செல்கிறார்கள்.
தமிழகத்தில் ‘இவர்களுக்கு’ விரைவில் இலவச மின்சாரம் – அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
அங்கே மீனா நான் வருவேன் என சொல்ல, ஆனால் ஜீவா முடியாது என சொல்கிறார். தொடர்ந்து, கண்ணன் ஐஸ்வர்யாவை அழைக்க தனம் கதிர் செல்கின்றனர். அங்கே ஐஸ்வர்யா தனக்கு வளைகாப்பு நடத்தாமல் முல்லைக்கு நடத்துவதை பார்த்து கோபப்படுகிறார். அவர் தனத்திடன் இது பற்றி கேட்க, உங்களுக்கு தான் குடும்பம் தேவை இல்லை என தனியாக வந்துவிட்டீர்கள் என தனம் சொல்ல, ஐஸ்வர்யாவால் எதுவும் பேச முடியவில்லை. இதெல்லாம் அடுத்து வரும் எபிசோடுகளில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download