![பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை அழிக்க நினைக்கும் ஜனார்த்தனன்.. ஜீவா சொன்ன பதில் - அதிரடியாக வெளியான ப்ரோமோ! பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை அழிக்க நினைக்கும் ஜனார்த்தனன்.. ஜீவா சொன்ன பதில் - அதிரடியாக வெளியான ப்ரோமோ!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/04/பாண்டியன்-ஸ்டோர்ஸ்-கடையை-அழிக்க-நினைக்கும்-ஜனார்த்தனன்.jpg)
பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை அழிக்க நினைக்கும் ஜனார்த்தனன்.. ஜீவா சொன்ன பதில் – அதிரடியாக வெளியான ப்ரோமோ!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜீவாவிடம் ஜனார்த்தனன் மற்ற கடைகளுக்கு போட்டியாக சலுகைகள் வழங்க வேண்டும் என சொல்ல, அதற்கு ஜீவா சொன்ன பதிலை கேட்டு ஜனார்த்தனன் அதிர்ச்சி அடைகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா வீட்டை விட்டு வந்த நிலையில் ஜனார்த்தனன் எப்படியாவது அவரை தன் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்கிறார். அவர் தற்போது இருக்கும் மீனாட்சி கடையை எப்படியாவது முன்னேற்ற வேண்டும் என சொல்ல, அதற்காக சிறப்பு சலுகையை வழங்குவோம் என சொல்கிறார். உடனே ஜீவா அப்படி செய்தால் மற்ற கடைகளில் வியாபாரம் போய்விடும் என சொல்ல, நீங்க பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு கஷ்டம் வந்துவிடும் என சொல்லவில்லையே என கேட்கிறார்.
அண்ணன் தம்பிகள் மீது எனக்கு கோவம் இருந்தாலும், அதற்காக நான் அவர்கள் கெட்டு போக கூடாது என நினைக்கமாட்டேன் என சொல்கிறார். அதை கேட்டு ஜனார்தனனிற்கு எல்லா திட்டமும் வீணாகிவிட்டது என்ற எண்ணம் வருகிறது. இதே மனநிலையில் ஜீவா இருந்தால் கண்டிப்பாக அவர் மீண்டும் வீட்டிற்கு வந்து மூர்த்தியிடம் சேர்ந்துவிடுவார் என்ற நம்பிக்கை இந்த ப்ரோமோ பார்த்ததும் ரசிகர்களுக்கு வந்துவிட்டது.