தீவிர மழையால் பால், காய்கறிகளின் விலை கடும் உயர்வு – பொதுமக்கள் அவதி!!

0
தீவிர மழையால் பால், காய்கறிகளின் விலை கடும் உயர்வு - பொதுமக்கள் அவதி!!
தீவிர மழையால் பால், காய்கறிகளின் விலை கடும் உயர்வு - பொதுமக்கள் அவதி!!
தீவிர மழையால் பால், காய்கறிகளின் விலை கடும் உயர்வு – பொதுமக்கள் அவதி!!

சென்னையில் இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் அத்தியாவசிய பொருட்களின் விலை கூட இரட்டிப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விலை உயர்வு:

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் சென்னை மாநகரம் முழுவதும் வெள்ளக்காடாய் காட்சியளித்து வருகிறது. இதனால், குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்து பொதுமக்களின் வாழ்வாதாரம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்த பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவும் அங்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த தீவிர கனமழையால் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.6) விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

அதாவது, பால், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் இரட்டிப்பு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், இருப்பிடத்திற்கு வீடும் இல்லாமல், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னை இயல்பு நிலைக்கு திரும்பும் வரையிலும் பால், காய்கறிகளின் விலை உச்சத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வறுமை நிலையில் இருக்கும் பொது மக்களின் தேவைக்காக அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!