விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய நடிகை வீணா வெங்கடேஷ் – காரணம் என்ன? அவரே வெளியிட்ட பதிவு!
விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒரு முக்கிய சீரியலில் இருந்து நடிகை வீணா வெங்கடேஷ் விலகிய நிலையில் அதற்கான காரணத்தை ஒரு வீடியோ பதிவின் மூலம் வெளியிட்டுள்ளார். இந்த காணொளி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நடிகை விலகல்
சின்னத்திரை சீரியல்களில் வில்லியாகவும் சில குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வீணா வெங்கடேஷ். இவர் தற்போது விஜய் டிவியில் ‘காற்றுக்கென்ன வேலி’ மற்றும் சன் டிவியில் ‘சித்தி 2’ ஆகிய சீரியல்களில் நடித்து வந்தார். அதாவது ‘சித்தி 2’ சீரியலில் சுப்புலக்ஷ்மியாகவும், ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் மீனாட்சியாகவும் அந்தந்த கதாபாத்திரத்துக்கு உரிய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்
விஜய் டிவி புதிய ‘கண்ணம்மா’ வினுஷா யார் தெரியுமா? முக்கிய தகவல்கள்! ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன?
இந்த சீரியல்களில் சமீபகாலமாக வெளியான எபிசோடுகளில் நடிகை வீணா சம்பந்தப்பட்ட காட்சிகளில் வேறொருவர் நடித்து அவை ஒளிபரப்பானது. இந்நிலையில் நடிகை வீணா சீரியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டாரா என ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பங்கள் உருவானது. இது குறித்து வலைதளங்களில் கேட்கப்பட்டு வந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக நடிகை வீணா ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் ரக்ஷிதாவிற்கு பதில் பிரபல நடிகை – இணையத்தில் கசிந்த தகவல்!
அதில், ‘சித்தி 2 மற்றும் ‘காற்றுக்கென்ன வேலி’ என்ற அற்புதமான ப்ராஜெக்ட்களை இழந்துவிட்டேன். அதற்கு காரணம் கொரோனா பாசிட்டிவ் தான். என்னை அந்த சீரியல்களில் மீண்டும் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டிருந்தனர். ஆனால் 2 நாட்கள் கழித்து என்னிடன் கேட்டிருந்தால் ஒருவேளை ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் ஆவது நான் இருந்திருப்பேன். இதற்காக ஒருவரையும் குறை சொல்ல முடியாது. இரண்டு சீரியல்களிலேயும் எனது ரோலை ரீபிளேஸ் செய்திருக்கிறார்கள். அதனால் வேறு ஒரு சீரியல் மூலம் விரைவில் உங்களை சந்திக்கிறேன்’ என உருக்கமாக பேசியுள்ளார்.