அச்சுறுத்தும் மஞ்சள் காய்ச்சல்.. பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் – மத்திய அமைச்சகம் தீவிர நடவடிக்கை!

0
அச்சுறுத்தும் மஞ்சள் காய்ச்சல்.. பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் - மத்திய அமைச்சகம் தீவிர நடவடிக்கை!
அச்சுறுத்தும் மஞ்சள் காய்ச்சல்.. பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் - மத்திய அமைச்சகம் தீவிர நடவடிக்கை!
அச்சுறுத்தும் மஞ்சள் காய்ச்சல்.. பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் – மத்திய அமைச்சகம் தீவிர நடவடிக்கை!

ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் என்னும் புதிய வகை நோய் பரவி வருவதால் இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கும் இந்திய நாட்டிற்குள் வருபவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் காய்ச்சல் நோய் தொற்று:

கொரோனா தொற்று தீவிர பரவலுக்கு பிறகு தற்போது ஓய்ந்துள்ள நிலையில் மஞ்சள் காய்ச்சல் எனும் புதிய வகை நோய் தொற்றினால் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏடிஎஸ் ஜேசிப்டி என்ற கொசுவின் தாக்குதல் காரணமாக இந்த மஞ்சள் காய்ச்சல் உண்டாவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குளிர்காலங்களில் இத்தகைய நோய் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் 5ஜி சேவை: 7 மாதத்திற்குள் 2 மில்லியன் வாடிக்கையாளர்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய் தீவிரமாக பரவி வருகிறது. அதே போன்று சூடான் நாட்டிலும் மஞ்சள் காய்ச்சல் நோய் பரவுவதால் உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து அகதிகளாக வரும் மக்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்குள் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர். நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு அதன் பிறகு சோதனை செய்து விடுவிக்கப்படுகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களுக்கும் இந்தியாவிலிருந்து அந்த நாடுகளுக்கு செல்பவைர்களும் கட்டாயம் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் இதற்கான சான்றுகளை சமர்ப்பித்த பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ள மூன்று பகுதிகளில் மட்டுமே மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!