பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ரத்து – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா பரவல் எதிரொலியாக அனைத்து இளநிலை படிப்புகளுக்கான பல்கலைக்கழக தேர்வுகளையும் ரத்து செய்வதாக குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.
தேர்வுகள் ரத்து
குஜராத் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக அனைத்து இளங்கலை படிப்புகளுக்கான பல்கலைக்கழக தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி கூறுகையில், அனைத்து இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகளை ரத்து செய்வதாகவும், மாணவர்களை அடுத்த வகுப்புகளுக்கு அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜூன் 7 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு? கட்டுக்கடங்காத கொரோனா!
இந்த அறிவிப்பின் படி குஜராத் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயின்று வரும் 9.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் 2, 4 மற்றும் 6 வது செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இந்த மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, குஜராத் மாநில அரசு 9 முதல் 11 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளது. தொடர்ந்து 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து, மருத்துவம் மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.