தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைவாக உள்ள காரணத்தால் ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கு அதிக எண்ணிக்கையில் ரயில்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரயில்கள் இயக்கம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் அமல்படுத்தப்பட்டன. குறிப்பாக பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் ரயில் சேவை தொடர்ந்து இயக்கப்பட்டு இருந்தது. குறிப்பட்ட சில முக்கிய வழித்தடங்களுக்கு மட்டும் வழக்கம் போல ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது கொரோனா பரவல் குறைவாக உள்ள காரணத்தால் ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பித்தல் – செப்டம்பர் 25 வரை காலக்கெடு!
இதனால் சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் பயணிகளின் தேவையை கருதி உத்தரப் பிரதேசம், பீகார், அசாம், திரிபுரா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் சிறிய நகரங்களுக்கு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தாம்பரத்தில் இருந்து அசாம் மாநிலத்தின் சில்ஹாத் நகருக்கு ரயில் இயக்கப்பட்டது. இதே போல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திரிபுராவிற்கும், விழுப்புரத்தில் இருந்து புருலியாவிற்கும் (காட்பாடி/ ஜோலார்பேட்டை வழி), சென்னையில் இருந்து கோரக்பூருக்கும் (காட்பாடி வழி) ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
இந்த இடங்களுக்கு பயணம் செய்ய மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகும். இருந்தபோதிலும் பயணிகளுக்கு திருப்திகரமான சேவை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் முன்பதிவு பட்டியல் நிரம்பி, காத்திருப்பு பட்டியலுடன் இருக்கிறது. குறிப்பாக ஜூலை 4ஆம் தேதி அன்று தாம்பரம்-சில்ஹாத் செல்லும் ரயில் ஸ்லீப்பர் மற்றும் ஏசி வகுப்புகள் அனைத்தும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளது.