தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை கொட்டி தீர்க்க போகுது – வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் தேனி, திருச்சி, கரூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று (அக்.09) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (அக்.09) தமிழகத்தில் கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி, நீலகிரி, கரூர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறைந்தது தங்கம் விலை.. ஒரு கிராம் ரூ. 5365க்கு விற்பனை – இன்றைய நிலவரம்!
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் கடலோர பகுதிகள், மன்னர் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி. மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.