TNUSRB Police Constables தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு – முழு விவரங்ககளுடன்!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆனது இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கென தேர்வானவர்களின் பட்டியலை அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆனது இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கென காலியாக உள்ள 3,552 பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து ஏராளமானோர் ஆன்லைன் மூலம் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றினார்.
ஏராளமானோர் விண்ணப்பித்ததை தொடர்ந்து இந்த தேர்வானது கடந்த 27.11.2022 அன்று நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆனது அதன் அதிகாரபூர்வ தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கென தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.