தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இத்தேர்வில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவது தேர்ச்சி பெறும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் முந்தைய ஆண்டு கணிதத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்த தொகுப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.
1)ஒரு தொகையின் தனிவட்டி 3 ஆண்டுகளுக்கு ரூ.235.20 மேலும் வட்டி வீதம் 14% எனில் அத்தொகையின் மதிப்பு என்பது
(A) ரூ. 480
(B) ரூ. 560
(C) ரூ. 650
(D) ரூ. 720
விடை : (B)
2) ஒருவர் ₹ 10,000 ஐ ஆண்டுக்கு 9% தனிவட்டி வீதத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் அவருக்கு கிடைக்கும் மொத்த தொகை எவ்வளவு?
(A) 12,500
(B) 11,800
(C) 12,700
(D) 12,000
விடை : (C)
3) A-யின் உயரமானது B-யின் உயரத்தில் 25% குறைவாக உள்ளது எனில் B-யின் உயரம் A-பின் உயரத்தில் எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது?
(A) 50%
(B) 45%
(C) 22 1/3%
(D) 33 1/3%
விடை – D
4) ரூ. 414-க்கு விற்கப்படும் ஒரு மேசையின் இலாபம் 15% எனில் அதன் வாங்கிய விலை என்ன?
(A) ரூ. 400
(B) ரூ. 314
(C) ரூ. 326
(D) ரூ. 360
விடை – D
5) ஒரு நாற்காலியின் விலை ரூபாய் 2100 யிலிருந்து ரூபாய் 2520 ஆக அதிகரித்துள்ளது எனில் அதிகரித்த விலை சதவீதத்தை காண்க.
(A) 15%
(B) 20%
(C) 10%
(D) 25%
விடை – B