TNPSC தேர்வாணையம் இன்று அவசர ஆலோசனை – குரூப் 4 தேர்வு முடிவுகளில் முக்கிய அறிவிப்பு வெளிவருமா..?

0
TNPSC தேர்வாணையம் இன்று அவசர ஆலோசனை - குரூப் 4 தேர்வு முடிவுகளில் முக்கிய அறிவிப்பு வெளிவருமா..?
TNPSC தேர்வாணையம் இன்று அவசர ஆலோசனை - குரூப் 4 தேர்வு முடிவுகளில் முக்கிய அறிவிப்பு வெளிவருமா..?
TNPSC தேர்வாணையம் இன்று அவசர ஆலோசனை – குரூப் 4 தேர்வு முடிவுகளில் முக்கிய அறிவிப்பு வெளிவருமா..?

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகளில் எழுந்த சர்ச்சை காரணமாக, தேர்வாணையம் இன்று அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தி முக்கிய முடிவை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வு முடிவு விவகாரம்:

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் ஆனது கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகளை எட்டு மாதங்களுக்கு பிறகு மார்ச் 24 ஆம் தேதி வெளியிட்டது. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருக்கும் போதே குரூப் 4 பணியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அதாவது குரூப் 4 தேர்வில், ஒரே பயிற்சி மையத்தில் பயின்ற 2000 பேர் தேர்ச்சி பெற்றது. அதேபோல காரைக்குடியில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய700 பேர் தேர்ச்சி அடைந்தது. அதுமட்டுமில்லாமல் குரூப் 4 தேர்வு எழுதிய பல லட்சக்கணக்கானோர் தங்களது முடிவுகளை அறிய முடியவில்லை என்றும் டிஎன்பிஎஸ்சிக்கு புகார் தெரிவித்தனர்.

நாட்டில் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் குறித்து முக்கிய தகவல் – அமைச்சர் விளக்கம்!

மேலும் குரூப் 4 தமிழ் தகுதி தேர்வில் சுமார் 5 லட்சம் பேர் தேர்ச்சி பெறாதது மற்றும் பலரின் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் உள்ளது என அடுக்கடுக்காக தேர்வர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் இந்த டிஎன்பிஎஸ்சி விவகாரம் குறித்து சட்டசபையிலும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் இதற்கு டிஎன்பிஎஸ்சி இடம் இருந்து சரியான விளக்கம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இப்படி நாளுக்கு நாள் ஏதாவது ஒரு செய்தி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் பற்றி வெளியாவதால் தேர்வாணையம் இன்று அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளது. இந்த கூட்டம் தற்காலிக தலைவர் தலைமையில் நடைபெற உள்ளதாகவும், இதில் அங்குள்ள உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டம் முடிவடைந்த பின் முக்கிய அறிவிப்புகள் வெளியாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

Follow our Instagram for more Latest Updates

இதேபோன்று கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் ஒரே தேர்வு மையங்களில் அதிகமானோர் தேர்ச்சி அடைந்ததை ஒட்டி விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் பல்வேறு முறை கேடுகள் நடந்தது உறுதியானது. அதன்பின் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் மற்றும் தேர்வு திருத்தும் முறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. பலதரப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டு எட்டு மாதங்களுக்குப் பிறகு முடிவுகள் வெளிவந்தும், பல்வேறு முறைகேடுகள் எழுந்துள்ளது தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம். இன்று எடுக்கப்பட உள்ள முக்கிய முடிவு, தேர்வர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கருத்து.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!