TNPSC வாய்மொழி தேர்வுக்கான தேதி மற்றும் மையம் குறித்த விவரங்கள் – வெளியீடு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் டிசம்பர் 2020க்கான துறை தேர்வுகளுக்கான வாய்மொழி தேர்வு கொரோனா காரணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தேதி மற்றும் இடங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC அறிவிப்பு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் பல்வேறு துறையில் அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகள் மூலமாக தகுதி உடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில் டிசம்பர் 2020க்கான துறை தேர்வுகள், 14.02.2021 முதல் 21.02.2021 வரை நடைபெற்றது. அத்துறை தேர்வுகளில் இரண்டாம் நிலை மொழி தேர்வுக்கான தேர்வு முடிவுகள் 09.04.2021 அன்று தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் பேட்டி!
இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மொழி தேர்வுகளுக்கான வாய்மொழி தேர்வு கொரோனா பெருந்தொற்று காரணமாக தாமதமான நிலையில் குறிப்பிட்ட தேர்வு மையங்கள் மற்றும் தேதிகளில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 07.07.2021 & 08.07.2021 ஆகிய தேதிகளில் நாகர்கோயில் மையத்திலும், 09.07.2021 தேதி மதுரை மையத்திலும்,
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
12.07.2021 & 13.07.2021 ஆகிய தேதிகளில் கோயம்பத்தூர் மையங்களிலும், 15.07.2021 தேதி கிருஷ்ணகிரி மையத்திலும், 16.07.2021 தேதி வேலூர் மையத்திலும், 17.07.2021தேதி திருவள்ளூர் மையத்திலும், 26.07.2021 & 27.07.2021 ஆகிய தேதிகளில் சென்னை மையத்திலும் நடைபெற உள்ளது. மேலும் இந்த தேதிகளில் வாய்மொழி தேர்வில் கலந்து கொள்ள தகவல் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தேர்வாணைய இணையதளத்தில் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.