TNHRCE யில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
TNHRCE ன் கீழ் அருள்மிகு பழனியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Office Assistant, Lab Assistant, Clerk பணிக்கென காலியாக உள்ள 26 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
TNHRCE வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Office Assistant, Lab Assistant, Clerk பணிக்கென காலியாக உள்ள 26 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ரிசர்வ் வங்கியில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளம்!
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு TNHRCE ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 09.10.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.