அதி தீவிர புயலாக வலுப்பெற்றது தவ் – தே – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
நேற்று முன்தினம் அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று வலுப்பெற்று தீவிர புயலாக மாறிய நிலையில், இன்று அது அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துளளது.
வானிலை அறிக்கை:
நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த புயல் (தவ்-தே) மேலும் வலுப்பெற்று நேற்று மாலை தீவிர புயலாகவும், அதனை தொடர்ந்து இன்று காலை (16.05.2021) அதி தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில்
நிலைகொண்டுள்ளது, இதன் காரணமாக
கொரோன தொற்று குறைந்தாலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் – முதல்வர் அதிரடி!!
16.05.2021: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.
17.05.2021: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.
TN Job “FB Group” Join Now
18.05.2021: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.
19.05.2021: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் திருநெல்வேலி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும்
காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இலேசான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
20.05.2021: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.
7 வது ஊதியக்குழு ஜூலை 1ல் DA அதிகரிக்குமா? – மத்திய அரசின் நிலை!!
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்):
பந்தலூர் (நீலகிரி) 18,சோலையாறு (கோவை) 17, தேவலா (நீலகிரி) 15, வால்பாறை (கோவை ), மேல் பவானி (நீலகிரி) தலா 11, இன்னக்கல்லார் (கோவை) 10, நடுவட்டம் (நீலகிரி) 9, வலோகம் (கன்னியாகுமரி) 8, குடலுர் பஜார் (நீலூரி) 7, குழித்துறை (கன்னியாகுமரி) 6, தேக்கடி (தேனி) 5, தென்காசி 4, பாபநாசம் (திருநெல்வேலி)
தலா 4.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
16.05.2021: கர்நாடகா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70-80 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 90 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
17.05.2021:, மத்திய கிழக்கு அரபிக்கடல், பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 145- 155 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 170 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.