தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

வானிலை தகவல்:

தமிழகத்தில் டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அண்மையில் சென்னையில் பெய்த இடைவிடாத கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளித்தது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (14.12.2023) தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

கைரேகை மூலமாக ரூ.6000 நிவாரணம் வழங்க முடிவு – தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

அதனை தொடர்ந்து டிசம்பர் 16, 17 ஆம் தேதி தமிழகத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். மேலும் குமரி கடல் மற்றும் மாலத்தீவு பகுதியில் சூறாவளி காற்று 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!