கணினி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணிகள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு !!
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது பள்ளிக்கல்வி துறையில், புதிய மாற்றங்களாக பல அறிவிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளார். அவை குறித்து தகவல்களை தற்போது எங்கள் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
பள்ளிக்கல்வி மாற்றங்கள் !
பள்ளிக்கல்வி துறையில் மாணவர்களுக்கு இந்த ஆண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 40% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்த முழுமையான அறிக்கையினை நிபுணர் குழு திங்கள்கிழமை முதல்வரிடம் சமர்ப்பிக்க உள்ளதாக அறிவித்து உள்ளார். மேலும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படாது எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
ஆசிரியர் பணிகள் !
தமிழக பள்ளிகளில் கணினி பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு ஆசிரியப் பணியிடம் வழங்கப்பட இருப்பதாக அறிவித்து உள்ளார். மேலும் சிறப்பாசிரியர்களுக்கான கலந்தாய்வு பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் அறிவித்து உள்ளார். இதனால் கல்வித்துறையில் இன்னும் சில நாட்களில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |