தமிழகத்தில் 9.10 லட்சம் மாணவர்கள் எழுதிய 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. 8,18,743 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் 95 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தோல்வியை தழுவினர். அவ்வாறு தேர்ச்சி பெறாதவர்களுக்கு விரைவில் துணைத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இன்று அதற்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி ஜூலை 2ம் தேதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படவுள்ளது. இத்துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மறுதேர்வின் முடிவிகள் ஜூலை இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும்.
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2024 – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!
இதனை போலவே மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்போர் மே 15 முதல் 20ம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் “தொடர்ந்து கற்போம்” என்ற திட்டத்தின் கீழ் துணைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவர்களின் பள்ளிகளிலேயே மே 13 முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.