தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – தேர்வின்றி அனைவரும் ஆல்பாஸ்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது.
இதனால் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு, பொதுத்தேர்வு, செமஸ்டர் தேர்வு என அனைத்தும் தள்ளிவைக்கப்படும், ஒரு சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் அறிவிப்புகள் வெளியாகியது.தற்போது ஊரடங்கானது படிப்படியாக தளர்த்தப்படுவதால் மாணவர்களுக்கான தேர்வானது நடத்தப்பட ஏற்பாடுகள் நடைபெற தொடங்கி விட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் 10 வகுப்பு பொதுத்தேர்வினை தள்ளிவைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றதிற்கும் தமிழக அரசிற்கும் இடையே கடும் ஆலோசனைகள் நடைபெற்று வந்தது. இதனால் தேர்வு குறித்த அறிவிப்பிற்காக அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக்கு கூட்டம் நடைபெற்றது. எ
அதில் தேர்வு நடத்துவது குறித்த பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்வதாக தமிழக முதல்வர் அறிவித்தார். மேலும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பிற்கு விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டு, காலாண்டு தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவேடு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |