தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு – கல்வி இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கை!
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் புயல் கனமழை காரணமாக விடுமுறை அளித்திருந்த நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
வங்க கடலில் உருவான நிஜாம் புயல் தமிழகத்தில் சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது இரவு பகலாக இடைவிடாது தொடர்ந்து பெய்த கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி மழை நீர் வீடுகளில் புகுந்துள்ளது. பலரும் தங்களது உடைமைகளை இழந்து அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் கடந்த 4ம் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
திருமணத்தில் இரு மனங்களின் முடிவே இறுதியானது – முதல்வரின் அதிரடி பதில்!
மழை குறையாத காரணத்தினால் தொடர்ச்சியாக விடுமுறை நீட்டிப்பும் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கண்ட மாவட்டங்களில் மீண்டும் பள்ளிகள் 11ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் பள்ளிகளை திறப்பதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகளை பள்ளி நிர்வாகம் மேற்கொள்ளப்பட வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.