பள்ளிகள் திறப்பு எப்போது – அமைச்சர் அறிவிப்பு
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களான பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மேலும் மாணவர்களுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் அடுத்த கல்வியாண்டு தொடங்கப்படுவது குறித்து தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் ஒரு அறிவிப்பினை வெளிட்டு உள்ளார். அதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்குவதை 14ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
அதன் பிறகு அதை எந்த வகையில் மாணவர்களுக்குப் புத்தகப்பையோடு வழங்கலாம் என்று ஆய்வு நடத்தக் குழு அமைக்கப்பட்டு அவர்கள் ஆய்வு நடத்தி எங்களுக்கு தெரிவித்தவுடன் எப்படி வழங்குவது என்பது முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார்.
மேலும் பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து 18 பேர் கொண்ட குழு வரும் 13ல் அறிக்கை தாக்கல் செய்கிறது. இதையடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் 30 சதவீத பாடம் குறைக்கப்பட்ட பின் பல்வேறு விமர்சனம் எழுந்துள்ளது.
எனவே இந்த விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை உள்ளது. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி தற்போது சிந்திக்கவே இல்லை எனவும் சென்னையை பொறுத்தவரை அனைவரும் ஆன்லைன் கல்வி கற்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளார்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |