தமிழகத்தில் கல்வியாண்டு ஜூலை வரை நீட்டிப்பா ??

0
தமிழகத்தில் கல்வியாண்டு ஜூலை வரை நீட்டிப்பா
தமிழகத்தில் கல்வியாண்டு ஜூலை வரை நீட்டிப்பா

தமிழகத்தில் கல்வியாண்டு ஜூலை வரை நீட்டிப்பா ??

தமிழகத்தில் தற்போது ஆன்லைன் வாயிலாக செயல்பட்டு கொண்டிருக்கும் நடப்பு கல்வியாண்டினை அடுத்த வருடம் ஜூலை மாதம் வரை நீட்டிப்பு செய்ய இருப்பதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்களிடம் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளன.

பள்ளிகள் திறப்பு ?!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு இருந்ததால், தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அடுத்த கல்வி ஆண்டு தொடங்கினாலும் தற்போது வரை ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தொற்றின் தாக்கம் தனியாத வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என்று தமிழக அரசு குறிப்பிட்டு உள்ளது. சமீபத்தில் பெற்றோர்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பள்ளிகளை தற்போது திறக்க வேண்டாம் என பெற்றோர்கள் கூறியதன் காரணத்தினால் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திப்போடப்பட்டுள்ளது.

கல்வியாண்டு நீட்டிப்பு !!

தற்போது தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தாமதமாக்கப்படுவதால், குறிப்பிட்ட காலத்திற்குள் அதாவது ஜூன்-ஏப்ரல் காலத்திற்குள் பாடங்களை முடித்து தேர்வினை நடத்துவது சாத்தியமில்லாதது என்று தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இதனால் இந்த கல்வியாண்டினை ஜூலை மாதம் வரை நீட்டிட்பு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. இருப்பினும் உயர் கல்வி சேர்க்கையினை கருத்தில் கொண்டு மத்திய கல்வி அமைச்சகத்தின் விளக்கத்திற்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!