தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் மதிப்பூதிய அடிப்படையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பாக Social Workers Members பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இங்கு மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவித்தப்படுகிறது.
நீதி குழுமத்திற்கு பெண் உட்பட 2 சமூக நல உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வரை இருக்கலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Flipkart நிறுவனத்தில் மேனேஜர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!
விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது குழந்தைகளுக்கான நலப்பணியில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப் பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, முன்னால் படைவீரர் மாளிகை, 2வது தளம், ஈரோடு-638001 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.