தமிழக ரேஷன் கடைகளில் மீதமுள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பு – அரசின் முக்கிய அறிவிப்பு!

0
தமிழக ரேஷன் கடைகளில் மீதமுள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பு - அரசின் முக்கிய அறிவிப்பு!
தமிழக ரேஷன் கடைகளில் மீதமுள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பு - அரசின் முக்கிய அறிவிப்பு!
தமிழக ரேஷன் கடைகளில் மீதமுள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பு – அரசின் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. தற்போது இந்த பரிசு தொகுப்பு வழங்கும் பணி நிறைவடைந்த நிலையில் மீதமுள்ள பரிசு தொகுப்பை பிற பயனாளிக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு மற்றும் முழு கரும்பு உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. அதன்படி இந்த பரிசு தொகுப்பு அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அத்துடன் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

EPFO அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு ஜாக்பாட் – விரைவில் வட்டி விகிதம் உயர்வு?

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 4ம் தேதி முதல் 13ம் தேதி வரை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்தது. ஆனால் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அனுப்பி வைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் ஜனவரி 31ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது இப்பணிகள் முடிவடைந்த நிலையில் ஏராளமான பொங்கல் பரிசு தொகுப்பு மீதமுள்ளது. இதன் தரத்தை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும். அத்துடன் இது குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமை அதிகாரி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அடுத்த 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – ஹிஜாப் விவகாரம் எதிரொலி!

இதில் கூறியதாவது, பொங்கல் பரிசுத் தொகுப்பில் மீதமுள்ள பொருட்களின் தரத்தை சரிபார்க்க வேண்டும். அதன் பின் அரசு சார்ந்த அமைப்புகளில் மற்றும் அரசு சாராத அமைப்புகளில் தங்கி இருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கலாம். அத்துடன் தொழு நோயாளிகளுக்கான காப்பகங்களில் உள்ள குடும்பங்கள் மற்றும் அரசு மனநல காப்பகத்தில் உள்ள குடும்பங்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த தொகுப்பை வழங்கலாம். மேலும் ஊரக குடிசைப் பகுதிகளில் உள்ள நோய்வாய்ப்பட்ட குறிப்பாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அம்மா உணவகம், சமுதாய சமையல் கூடங்கள் உள்ளிட்ட இடங்களுக்கும் வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!