தமிழக கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு விதிமுறைகள் – புதிய குழு நியமனம்!!
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கு விதிமுறைகளை அமைக்க தமிழக அரசு 7 பேர் கொண்ட புதிய குழு ஒன்றை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய விதிமுறைகள்:
தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதத்தில் கொரோனா தொற்றின் முதல் அலையின் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. மாணவர்களுக்கான தேர்வுகள் சில இடங்களில் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. சில இடங்களில் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து? இன்று முக்கிய ஆலோசனை!!
தொடர்ந்து புதிய கல்வி அமர்வு தொடங்கப்பட்டது. ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வந்ததால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கற்பிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள போது மாணவர்களுக்கு கற்றல் பணியினை தொடர்வதற்கு ஆன்லைன் வகுப்புகள் உதவியது. தற்போது ஆன்லைன் வகுப்புகளில் சில ஆசிரியர்கள் முறை தவறி நடப்பது தொடர்பாக புகார்கள் எழுந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை உருவாக்க 7 பேர் கொண்ட குழு ஒன்றை தமிழக அரசு நியமித்துள்ளது. கல்லூரி கல்வி இயக்குனர் பூர்ண சந்திரன் இந்த குழுவிற்கு தலைமை தங்குகிறார். கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை இந்த குழு உருவாக்கி வருகிறது. இந்த குழு புதிய விதிமுறைகள் தொடர்பான அறிக்கையை ஜூன் 11ம் தேதி சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஆசிரியர்களுக்கு ஏற்படும் செலவை யார் ஈடு செய்வது என்பதையும் தீர்மானித்தால் நல்லது. இரண்டு லகரத்தையும் தாண்டும் செலவை… கல்வி கட்டணம் வாங்கி பெட்டியில் மூடும் நிர்வாகங்கள் கண்டு கொள்வதில்லை என்பது வேதனையாக உள்ளது.