தமிழகத்தில் 1463 கணினி பயிற்றுனர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் – அரசு முதன்மை செயலர் அறிக்கை!
தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 1463 கணினி பயிற்றுனர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஏப்ரல் மாத ஊதியம் தொடர்பான அதிகாரபூர்வ அரசாணையை முதன்மை செயலர் வெளியிட்டுள்ளார்.
அறிக்கை வெளியீடு:
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின் படி 1880 கணினி பயிற்றுனர் நிலை 2 க்கான பணியிடங்களில் 1463 கணினி பயிற்றுனர் நிலை 2 பணியிடங்களுக்கு 1.1.2020 முதல் 31.12.2025 வரை வரை 3 ஆண்டுகளுக்கு தற்காலிக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பணி நீடிக்கப்பட்ட இந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான அனுமதி முன்னதாக கோரப்பட்டிருந்தது.
தமிழகத்தில் இலவச மின்சாரத்திற்கும் இனி மீட்டர் பொருத்தம் – மத்திய அரசின் உத்தரவு!
இந்த 1463 கணினி பயிற்றுனர் நிலை 2 பணியிடங்களுக்கு ஏப்ரல் 2023ம் மாதத்திற்கான ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பாணை வழங்கப்படுகிறது. மேற்கண்ட பணியிடங்களுக்கான ஏப்ரல்2023 ம் மாத சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதிய பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில் ஊதியம் பெற அனுமதிக்குமாறு அரசு முதன்மை செயலர் அவர்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளார்.
Exams Daily Mobile App Download