சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – நேர மாற்றம்! ஊரடங்கு எதிரொலி!
தமிழகத்தில் ஓமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ள நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ நிர்வாகம்:
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்றும் தமிழகத்தில் வேகமெடுத்து வருகிற நிலையில் நோய் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை வெளியிட்டு வருகிறது. இதை தொடர்ந்து இன்று முதல் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்படுகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக்கு தடை விதித்து முழு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாநில கல்வித்துறை உத்தரவு!
சென்னை மாநகரில் காலையில் பணிக்கு செல்லும் ஊழியர்கள் அதிகமாக உள்ளனர். அதனால் ஊழியர்கள் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் 2015 ஆம் ஆண்டு புதிதாக மெட்ரோ ரயில் சேவையை அறிமுகப்படுத்தப்பட்டது. மெட்ரோ ரயில் சேவையினால் நேரம் மிச்சம் ஆவதால் பொதுமக்களும் அதிகம் பயன்படுத்துகின்றனர். தற்போது அமல்படுத்தப்பட்டு உள்ள கட்டுப்பாடுகளால் மெட்ரோ ரயில் சேவை நேரம் மாற்றப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜன.20 வரை விடுமுறை!
இன்று முதல் சென்னையில் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணிவரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள இடங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்