தமிழ் தம்பியின் காதலுக்கு எதிர்ப்பு, சரஸ்வதிக்கு மாப்பிள்ளை பார்க்கும் ஏற்பாடு – இன்றைய எபிசோட்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று தமிழுக்கு நல்ல படித்த பெண் தான் பார்க்க வேண்டும் என்று அவரது அம்மா கோதை உறுதியாக இருக்கிறார். மறுபுறம் சரஸ்வதியின் அப்பா லிங்கம் சரஸ்வதி சரியாக படிக்கவில்லை என்று அவரை திட்டி விடுகிறார்.
“தமிழும் சரஸ்வதியும்” சீரியல்
இன்று “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் தமிழுக்கு நல்ல படித்த பெண் தான் வேண்டும் என்று கோதை திட்டவட்டமாக தரகரிடம் கூறி விடுகிறார். பின், தனது மகனுக்கு காதல் எதுவும் இருக்கிறதா? என்று கேட்டுக்கொள்வோம் என்று தமிழின் அப்பா கூறுகிறார். இதனை கேட்டு கொந்தளிக்கும் கோதை தனது மூன்று பிள்ளைகளும் தான் பார்க்கும் வரன்களை தான் திருமணம் செய்து கொள்வர் என்று கூறுகிறார். இதனை கேட்டு விட்டு தமிழுக்கு என்னவோ போல ஆகி விடுகிறது. பின், தமிழின் தம்பி கார்த்திக்கு அவரது காதலி வசுந்தரா போன் செய்து தனது குடும்பத்தினை நாளை சந்திக்க வேண்டும் என்று கூறுகிறார்.
தமிழக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் – உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!
பின், சரஸ்வதியின் வீட்டில் சரஸ்வதி தான் படித்து எழுத சொன்னதை எழுதாமல் சாப்பிட உட்கார்ந்ததும் அவரது அப்பா லிங்கத்திற்கு கோபம் வந்து விடுகிறது. இதனால் அவர் சரஸ்வதியை சாப்பிட விடாமல் தடுத்து விடுகிறார். இதனை பார்த்து விட்டு சரஸ்வதியின் பாட்டி கொந்தளிக்கிறார். இதனால் மேலும் கோபம் அடையும் லிங்கம் சரஸ்வதிக்கு பழைய சாதத்தினை வைத்து விட்டு அதனை சாப்பிட சொல்கிறார்.
பின், காலையில் சரஸ்வதிக்கு என்று நல்ல மாப்பிள்ளையை தான் பார்த்திருப்பதாகவும், அவர்கள் இன்று மாலை வீட்டிற்கு வர இருப்பதாகவும் சரஸ்வதியின் பாட்டி கூறி விடுகிறார். இதனை கேட்டுவிட்டு லிங்கத்திற்கு முதலில் கோபம் வருகிறது. பாட்டி மற்றும் அவரது மனைவி இருவரும் அவரை சமாதானம் செய்து விடுகின்றனர். சரஸ்வதியை பார்க்க மாப்பிள்ளை வீட்டாரும் வருகின்றனர். அவர்களுக்கு சரஸ்வதியை பிடித்திருக்கிறது என்று கூறி விட்டு சரஸ்வதியின் படிப்பு குறித்து கேட்கின்றனர்.
TN Job “FB Group” Join Now
12ம் வகுப்பு கூட முடிக்கவில்லை என்று கூறியதும் மாப்பிள்ளை வீட்டார் டென்ஷன் அடைந்து லிங்கத்தினை திட்டுகின்றனர். தரகர் தான் தங்களிடம் இது குறித்து மறைத்து விட்டதாக புகார் தெரிவித்து விட்டு செல்கின்றனர். இதனை பார்த்து விட்டு சரஸ்வதி மனம் உடைந்து போய் விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.