தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் நிலவும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்து வரும் 2 அல்லது 3 நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

வெப்பச்சலனம்‌ காரணமாக,

27.05.2021: கன்னியாகுமரி மாவட்டத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள்‌, திருநெல்வேலி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையும்‌ நிலவும்‌.

TN Job “FB  Group” Join Now

28.05.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள்‌, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையும்‌ நிலவும்‌.

29.05.2021,30.05.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்‌, கன்னியாகுமரி மற்றும்‌ உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

மத்திய அரசின் ஆயுள் காப்பீடு திட்டம் – கொரோனா இறப்புக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு!

31.05.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடியுடன்‌ கூடிய கன மழையும்‌, கன்னியாகுமரி மற்றும்‌ உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

வெப்பநிலை முன்னறிவிப்பு:

அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகத்தில்‌ கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவள்ளூர்‌, சென்னை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌ மற்றும்‌ திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ அதிகபட்ச வெப்பநிலை 2 முதல்‌ 3 டிகிரி செல்சியஸ்‌ வரை உயரக்கூடும்‌.

சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கு இலவச அனுமதி – மத்திய அரசின் புதிய விதிமுறை!!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 40 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

27.05.2021, 28.05.2021: குமரிக்கடல்‌, மன்னார்‌ வளைகுடா பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர்‌ அவ்வப்போது 60 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

27.05.2021, 28.05.2021: கேரளா, இலட்சத்தீவு, மாலத்தீவு மற்றும்‌ கிழக்கு இலங்கை கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று 40-50 கிலோமீட்டர்‌, அவ்வப்போது 60 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

நாடு முழுவதும் கொரோனா மருந்து பொடி 2DG விற்பனை – இன்று முதல் தொடக்கம்!!

கடல்‌ உயர்‌ அலை முன்னறிவிப்பு:

தென்‌ தமிழக கடலோரப்‌ பகுதியில்‌ (குளச்சல்‌ முதல்‌ தனுஷ்கோடி வரை) 28.05.2021 இரவு 11.30 வரை கடல்‌ அலை 3.5 முதல்‌ 4.0 மீட்டர்‌ உயரம்‌ வரை எழும்பக்கூடும்‌. மீனவர்கள்‌ மேற்குறிப்பிட்ட தேதிகளில்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!