தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் – நாளை (ஜன. 12) முதல் இயக்கம்!

0

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் – நாளை (ஜன. 12) முதல் இயக்கம்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜன.12) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகள்

தமிழகத்தில் வருகிற ஜன. 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை வர இருக்கிறது. பொங்கலை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் மக்கள் பலர் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதனால், அரசு பேருந்துகளில் முன்பதிவு வசதி தொடங்கப்பட்டது. தற்போது அனைத்து பேருந்துகளிலும் முன்பதிவு இருக்கைகள் நிரம்பி உள்ளன. அதனால் மக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 50% DA உயர்வு – வெளியான முக்கிய தகவல்!

இந்த சிறப்பு பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நாளை (ஜன.12) முதல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல, முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!