தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்!
தமிழகத்தில் கனமழை காரணமாக காரைக்கால், திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ. 10) விடுமுறை விடப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் மழை மக்களுக்கு கடுமையான இடையூறை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கரூர், திருப்பூர், கடலூர், அரியலூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உட்பட 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நேற்று நள்ளிரவு முதல் காரைக்கால், திருவாரூரில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (நவ. 10) விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் காரைக்காலில் கடந்த 24 மணி நேரத்தில் 4.7 செ.மீ.மழை பெய்துள்ளது. அதே போல திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.