தமிழக ரேஷன் கடைகளுக்கு பருப்பு, பாமாயில் கொள்முதல் – உயர் நீதிமன்றம் அனுமதி!
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதல் செய்வதற்கான டெண்டரில் பல்வேறு மாற்றங்கள் இருக்கிறது என்றும் எனவே இதனை தடை செய்ய வேண்டும் என்றும் மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
கொள்முதல் டெண்டர்:
தமிழகத்தில் உணவுப்பொருள் வணிக கழகம் சார்பில் சுமார் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பருப்பு, பாமாயில் வழங்கபட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டிற்கு சுமார் 20 லட்ச டன் பருப்பு மற்றும் 80 லட்ச டன் பாமாயில் கொள்முதல் செய்வதற்கு டெண்டர் விடுக்கப்பட்டது. ஆனால் இந்த டெண்டர் முறையாக நடைபெறவில்லை என்று கூறி மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
பிற்பகல் 12 மணிவரை கடைகளை திறக்க அனுமதி – ஜூன் 10 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!
அந்த மனுவில் கூறியதாவது, டெண்டரில் முந்தைய நிபந்தனைகளை பின்பற்றாமல் புதிய நிபந்தனைகள் அடிப்படையில் வெளியிட்டுள்ளதாகவும், டெண்டர் அறிவிப்பில் உள்ள 14 நிபந்தனைகள் முறையாக பின்பற்றவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 2 கோடிக்கு மேல் மதிப்பிலுள்ள டெண்டருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் ஆனால் இந்த டெண்டர் 6 நாட்களில் முடிக்கப்பட்டது. எனவே இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதனை விசாரித்த மதுரை நீதிமன்றம் டெண்டருக்கு இடைக்கால தடை விதித்தது. இதனை தொடர்ந்து தமிழக அரசு, டெண்டர் தடையை நீக்க கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் இதற்கு முன்பே மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்த நபர் தான் கொடுத்த வழக்கினை வாபஸ் பெற்றுக்கொண்டார். வழக்கு வாபஸ் பெறப்பட்டதால் மேல்முறையீட்டு மனுவை சென்னை நீதிமன்றம் முடித்து வைத்து இடைக்கால தடையையும் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது.