தமிழக அரசு ஊழியர்களுக்கான கருணை அடிப்படை பணி வரன்முறை – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
தமிழக அரசுப்பணிகளில் கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி வரன்முறை செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு:
தமிழக அரசு பணிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கான பணி வரன்முறை குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி, “2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி முதல்,
TN Job “FB
Group” Join Now
2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை கருணை அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்ட இளநிலை வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தட்டச்சர் ஆகியோருக்கு எந்தவித விதி தளர்வும் இல்லாமல் ஒரே அரசாணையில் பணிநியமனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது”.
அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான சிறப்பு லோன் திட்டம் – எஸ்பிஐ வங்கி வெளியீடு!!
இதன்படி அந்த ஊழியர்களுக்கு பணிவரன் முறை உரிய செயல்முறை ஆணை வெளியிட்டு அரசு பணியாளர்களை பணி பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்ட பணி நியமனம் பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் அந்த அறிவிப்பில் விலக்கு தேவைப்படும் பணியாளர்களை பொறுத்தவரையில் அவர்களை தற்காலிக பணியாளர்களாக கருதி அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்