தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு கூடுதல் பேருந்துகள் – அமைச்சர் முக்கிய தகவல்!
தமிழகத்தில் சபரிமலை சீசன் தொடங்கி இருக்கும் நிலையில் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.
கோரிக்கை அறிவிப்பு
தமிழகத்தில் கார்த்திகை மாதம் தொடங்கியதும் மக்கள் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடுவார்கள். தற்போது சீசன் தொடங்கி இருப்பதால் தினமும் லட்சக்கணக்கில் மக்கள் சபரிமலைக்கு தரிசனம் செய்ய செல்கின்றனர். அதனால் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் பக்தர்கள் வசதிகாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தமிழகத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
விலங்குகளுக்கும் ஆம்புலன்ஸ் சேவை – மாநில அரசின் புதிய திட்டம்!!
அதே போல கேரள மாநிலம் பம்பையில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும், தமிழகத்தில் இருந்தும் செல்லும் பக்தர்களின் உதவிக்காக 2 அதிகாரிகள் சபரிமலையில் பணியில் இருப்பதாகவும், சபரிமலை பக்தர்களுக்காக 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள், 10 லட்சம் தண்ணீர் கேன்கள் தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.