தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை – தலைமை செயலாளர் உத்தரவு!!
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 6) சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் மாநிலம் முழுவதும் பொது விடுமுறை விடப்படுவதாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் உத்தரவிட்டு உள்ளார்.
பொது விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தினசரி 3000க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி போன்ற விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. நாளை (ஏப்ரல் 6) மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு? பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெளியூரில் வசிக்கும் தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்கு வசதியாக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக அரசு மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதுமட்டுமின்றி வாக்குப்பதிவு நாளன்று அனைத்து நிறுவனங்களும் தங்களது தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த உத்தரவினை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும் நாளை (ஏப்ரல் 6) மாநிலம் முழுவதும் பொது விடுமுறை விடப்படுவதாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அனைவரும் தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுமாறு தலைவர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.