சட்டமன்ற தேர்தலுக்கு பின் பொதுத்தேர்வு – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடாத நிலையில் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கு பின் 10,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:
கொரோனா நோய் அச்சம் காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. நடப்பு கல்வியாண்டு தொடங்கி 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்தோ, பொதுத்தேர்வு குறித்தோ எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு பள்ளிகளில் அந்த வசதி இல்லாத மாணவர்களின் நலனுக்காக கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
யுபிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி – மதுரை காமராஜ் பல்கலை நுழைவுத்தேர்வு அறிவிப்பு!!
இந்நிலையில் பொதுத்தேர்வுக்கு தயராகி வரும் மாணவர்கள் தேர்வு குறித்து எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில் தேர்வு நடக்குமா? ரத்து ஆகுமா? என்ற குழப்பத்தில் உள்ளனர். மத்திய அரசு சார்பில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் பல மாநில அரசுகள் இன்று மேல்நிலை பள்ளிகளை திறந்துள்ளது. சில தனியார் பள்ளிகளும் மாதிரி பொதுத்தேர்வு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பொதுத்தேர்வு குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தபோது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற மே மாதம் இறுதியில் நடக்கவுள்ளது. தேர்தலுக்கு பின் தேர்வுகள் நடப்பது குறித்து முடிவு வெளியிடப்படும் என்று தெரிவித்தார். ஏற்கனவே பொதுத்தேர்வு குறித்து மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
மத்திய கல்வி நிறுவன மாணவர்களுக்கு உதவித்தொகை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!
இவ்வாறாக சூழ்நிலை உள்ளதால் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே பாடங்கள் குறைப்பு குறித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் பொதுத்தேர்வுக்கு வரும் பாடங்களை பற்றிய அறிவிப்பு மட்டும் வெளியிடுமாறு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை மாணவர்கள் tension ஆகவே இருக்க வேண்டும். CBSE 10,12 தேர்வு தேதியை அனுசரித்து தேர்வு தேதியை அறிவிக்கலாம்.