தமிழகத்தில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி – முக்கிய உத்தரவு வெளியீடு!!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் வேகமெடுத்து வரும் நேரத்தில் மருந்து தட்டுப்பாடு காரணமாக மாநிலத்தில் முதல் தவணை தடுப்பூசி போடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமெடுத்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும் முதற்கட்டமாக காவல் துறையினர், மருத்துவர்கள், களப்பணியாளர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோருக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோயாளிகளுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
தடுப்பூசி இரண்டு தவணையாக வழங்கப்படும். அந்தந்த துறைகளை சேர்ந்தோருக்கு ஒத்துக்கப்பட்ட நாட்களில் தடுப்பூசி வழங்கப்படுகிறது. இந்நிலையில் மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட்டு வருகிறது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்கள் கழித்து இரண்டாவது தவணை செலுத்தப்படும்.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு காரணமாக முதல் தவணை தடுப்பூசி போடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை வாய்மொழியாக மட்டுமே அனைத்து மருத்துவர்களுக்கும் தெரிவித்துள்ளனர். இதனால் தடுப்பூசி போட மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.