தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு!!
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், அது குறித்து ஆலோசனை வழங்க அனைத்து கட்சி தலைவர்களுக்கும் முதல்வர் முக ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
முதல்வரின் அழைப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மார்ச் மாதத்தில் ஆரம்பித்தது. மெல்ல மெல்ல தொற்று பரவல் அதிகரித்து தற்போது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பாதிப்புகள் உள்ளது. இதனால் கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, இரவு நேர மற்றும் வார இறுதி நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இருப்பினும் தொற்று பாதிப்புகள் ஒரு நாளில் 25,000 ஐ கடந்து சென்றதால் தமிழகம் முழுவதும் கடந்த மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கான கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை செயல்படவும், அவசர தேவைகளுக்கு மட்டும் வெளியில் வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேவை – மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!
இந்நிலையில் நாட்டிலேயே தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடத்தை பிடித்துள்ளது. தொற்றின் பாதிப்பும் ஒரு நாளிற்கு 26,000யை கடந்து பதிவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு ஆலோசனைகளை வழங்க அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் முதல்வர் முக ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். நாளை மாலை 5 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்