தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக அலகு தேர்வுகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அலகு தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தினால் தேர்வு நடத்தாமல் தேர்ச்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உயர்கல்வி காரணமாக கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அலகு தேர்வு நடத்துவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள், மாணவிகள் தனித்தனி குழுக்களாக பிரித்து வாட்ஸ்ஆப் மூலமாக கேள்வி தாள்கள் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
- வாட்ஸ்ஆப் மூலமாக மாணவிகளுக்கு தனி குழு, மாணவர்களுக்கு தனி குழு அமைக்கப்படும்.
- அதில் தனித்தனியாக தேர்வு நடைபெறும் போது வினாத்தாள் அனுப்பப்படும்.
- மாணவ, மாணவிகள் தனித்தனியாக அனுப்பப்பட்ட வினாக்களை பார்த்து அதற்கான விடைகளை தனி தாளில் எழுத வேண்டும்.
- பின்னர் விடைத்தாளில் பெற்றோர் கையெப்பம் பெற்று அதனை PDF ஆக மாற்றி பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- விடைத்தாளில் பெயர் மற்றும் பதிவு எண் ஆகியவற்றை கட்டாயம் எழுத வேண்டும்.
- கேள்விகள் அனுப்ப தொடங்கப்பட்டுள்ள அந்த வாட்ஸ்ஆப் குழுவில் வேறு எந்த செய்திகளோ, வீடியோக்களோ அனுப்ப கூடாது.
- அதன் பின்னர் ஆசிரியர்கள் அந்த விடைத்தாள்களை திருத்தி அதற்கான மதிப்பெண் வழங்க வேண்டும்.