தொடர்ந்து தமிழ் பள்ளிகள் மூடல் – பெற்றோர்கள் முக்கிய கோரிக்கை!!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தமிழ் பள்ளிகள் மூடப்பட்டு வருவதால் மீண்டும் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பள்ளிகள் மூடல்:
தமிழகத்தில் இருந்து கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தெலுங்கானா மாநிலத்திற்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அங்குள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு தெலுங்கு மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்களின் குழந்தைகளும் தெலுங்கு மொழி பயின்று வருகின்றனர். அதே நேரத்தில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலதாமதமாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி – வானிலை மையம் தகவல்!
அதே போல, மீதமுள்ள தமிழ் நிறுவனங்களிலும் தமிழ் பாடம் நீக்கப்பட்டுள்ளதால் தமிழர்களின் பிள்ளைகள் வலுக்கட்டாயமாக தெலுங்கு, சமஸ்கிருதம் படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெலுங்கானா முதல்வரிடம் கலந்து பேசி தமிழ் வகுப்புகளை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.