ரயில் பயணிகள் கவனத்திற்கு….முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிப்பு – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!
தமிழகத்தில் ரயில் பயணிகளின் பயண நேரத்தை குறைக்கும் வகையில், முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பான கூடுதலான தகவல்களை பார்ப்போம்.
ரயில் வேகம்:
தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில்களின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று கொண்ட ரயில்வே துறையானது, முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது, வேகக் கட்டுப்பாடுகளை அகற்றுவது, சிக்னல் முறையை மேம்படுத்துவது, பாலங்களை சீரமைப்பது, சுரங்கம் கட்டுமானப் பணிகளை செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள் – இன்றைய விலை நிலவரம் என்ன?
Follow our Instagram for more Latest Updates
அதன்படி இந்த நிதியாண்டில், விருத்தாசலம்-சேலம், தஞ்சாவூர்-பொன்மலை, மதுரை-திருநெல்வேலி, விழுப்புரம்-புதுச்சேரி, அரக்கோணம்-செங்கல்பட்டு, விழுப்புரம்-காட்பாடி, திருநெல்வேலி-திருச்செந்தூர், திருநெல்வேலி-தென்காசி, தஞ்சாவூர்-நாகர்கோவில் உள்ளிட்ட 9 வழித்தடங்களில் 110 கி.மீ. வரை வேகத்தை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மேலும், சென்னையிலிருந்து ரேணிகுண்டா மற்றும் அரக்கோணத்திலிருந்து ஜோலார்பேட்டை வரை இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை 110 கிலோமீட்டரில் இருந்து 130 கிலோமீட்டராக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதே போல் தமிழகத்தில் முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.