அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆனது வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என வெளிவந்த தவறான செய்தி காரணமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது நடைபெறும் என்ற தகவல்களை தற்போது தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு வாய்ப்பிலை:
இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தற்போதைய சூழலில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.
சில தனியார் பள்ளிகள் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் விபரங்களை கட் அவுட் ஆக வைத்து மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டு வருவதாக, புகார்கள் எழுந்ததால் சில தனியார் பள்ளிகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் இது போன்ற விளம்பர பலகையாக வைக்கக்கூடாது எனவும், மீறி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.