தமிழகத்தில் பால் கொள்முதல் விலை ரூ. 3 உயர்வு – முதல்வர் கருத்து!
தமிழக அரசு விவசாயிகள் மகிழும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி இருக்கிறது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
பால் விலை
தமிழக அரசு ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி இருக்கிறது. அதன் படி இதுவரை ரூ. 35க்கு கொள்முதல் செய்யப்பட்ட பசும்பால் ரூ. 38க்கும், ரூ. 44க்கு விற்பனை செய்யப்பட்ட எருமைப்பால் ரூ.47க்கும் டிசம்பர் 18 ஆம் தேதி முதல் கொள்முதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மூலம் சுமார் 4 லட்சம் பால் விவசாயிகள் பயனடைவார்கள்.
டிச மாத ரூ.1,000 உரிமைத்தொகை உங்களுக்கு கிடைத்து விட்டதா? – செக் பண்ணுங்க மக்களே!
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதன் படி விவசாயிகள் மகிழும் வகையில் பால் கொள்முதல் விலை 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இது வரை இல்லாமல் ஒரே ஆண்டில் பால் கொள்முதல் விலையை 6 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு இருப்பதாக பெருமைப்பட முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.