தமிழகத்தில் ஓலா நிறுவனம் எடுத்த புதிய முயற்சி – அதிகரிக்கும் வேலைவாய்ப்பு!
முன்னணி வாடகை கார் நிறுவனமான ஓலா தமிழகத்தில் ஒருங்கிணைந்த 2W, கார் மற்றும் லித்தியம் செல் தொழிற்சாலைகளுடன் உலகின் மிகப்பெரிய EV மையத்தை அமைக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ஓலா நிறுவனம்
ஓலா எலக்ட்ரிக் மொபிலிடி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது துணை நிறுவனங்களான ஓலா செல் டெக்னாலஜீஸ் (OCT) பிரைவேட் லிமிடெட் மற்றும் ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜீஸ் (OET) பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் மூலமாக மின்கல உற்பத்தி ஆலை மற்றும் மின் வாகன உற்பத்தி ஆலையை தமிழகத்தில் நிறுவ திட்டமிட்டு வருகிறது. அதற்காக ஓலா செல் டெக்னாலஜீஸ் (OCT) நிறுவனம் 5,114 கோடி ரூபாயும், ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜீஸ் (OET) நிறுவனம் 2,500 கோடி ரூபாயும் முதலீடு செய்ய இருக்கிறது.
நீண்ட கால விடுப்பில் அரசு பள்ளி ஆசிரியர்கள் – பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி முடிவு!
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் ஓலா நிறுவனம் தமிழகத்தில் ஒருங்கிணைந்த 2W, கார் மற்றும் லித்தியம் செல் தொழிற்சாலைகளுடன் உலகின் மிகப்பெரிய EV மையத்தை அமைக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இதன் மூலம் ஏகப்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.