சென்னை: கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்து வருவதன் எதிரொலியாக சென்னையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. மேலும் வரும் காலங்களிலும் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்கத்தின் விலை:
சர்வதேச சந்தையில் பல்வேறு காரணங்களின் காரணமாக தங்கம் விலையானது தொடர்ச்சியாக 3வது நாளாக அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலையானது அவுன்ஸூக்கு 1800 டாலர்களுக்கு மேலாக விற்பனையாகிறது. இதனால் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
Amazon, Flipkart நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் – தகுதி, சம்பளம் & விண்ணப்ப விவரங்கள் இதோ!
மேலும் நீண்ட காலமாக தங்கத்தின் விலை அதிகரிக்கும் நிலை உள்ளதால், நீண்ட கால நோக்கில் தங்கம் வாங்க இது சரியான நேரமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 4.20 டாலர்கள் அதிகரித்து, 1820.85 டாலர்களாக விற்பனையாகிறது. வெள்ளி விலை1% அதிகரித்து, 24.337 டாலர்களாக விற்பனையாகிறது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, அதிகரித்துள்ளது.
இலவச ரேஷன் திட்டம் மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சற்று அதிகரித்து உள்ளது. ஒரு கிராம் ரூ.2 அதிகரித்து கிராம் 4,544 ரூபாயாக விற்பனையாகிறது. சவரனுக்கு 16 ரூபாய் அதிகரித்து, 35,352 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரண வெள்ளியின் விலை கிராமுக்கு 40 பைசா அதிகரித்து, 69.10 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகைப்பிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இருப்பினும், தேவையிருக்கும் பட்சத்தில் தங்கம் வாங்க இது சரியான நேரமாக கூறப்படுகிறது.