தமிழகத்தில் டிச. 17 முதல் ரூ.6000 வெள்ள நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 6000 நிவாரணம் குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த டிச. 4 ஆம் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை மிக்ஜாம் புயல் தாக்கியது. இந்நிலையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏகப்பட்ட சேதாரங்கள் ஏற்பட்டது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டு இருக்கிறது.
மதுபான பாட்டில்களில் பார் கோடு ஸ்டிக்கர் – டாஸ்மாக் நிர்வாகத்தின் புதிய திட்டம்!!
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6000 நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை வருகிற டிச. 17 ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பஃப்பகுதிகளில் ஒன்றான வேளச்சேரியில் இந்த திட்டம் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.