தமிழக நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு – தகுதியின் அடிப்படையில் பணி நியமனம்!

0
தமிழக நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு - தகுதியின் அடிப்படையில் பணி நியமனம்!
தமிழக நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு - தகுதியின் அடிப்படையில் பணி நியமனம்!
தமிழக நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு – தகுதியின் அடிப்படையில் பணி நியமனம்!

தமிழகத்தில் நீதிமன்றங்களில் வேலை வாங்கி தருவதாக கூறும் நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.

உயர்நீதிமன்ற பணிகள்:

தமிழகத்தில் அரசு பணியில் சேர வேண்டும் என்பது ஏராளமானோரின் கனவாக இருந்து வருகிறது. முதலில் வேலைவாய்ப்பு பதிவு அடிப்படையில் அரசு பணிகள் வழங்கப்பட்டது. நாளுக்கு நாள் அரசு வேலை நாடுநர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதால் திறமையும், கல்வி அறிவும் உள்ளவர்களுக்கு அரசு பணிகள் வழங்க முடிவு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு பணிகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலர் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர்.

TNPSC குரூப் 4 VAO போட்டித்தேர்வு ரத்து? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு!

அரசு அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மூலம் சிபாரிசு செய்து பணி வாங்கி தருவதாக கூறி அரசு வேலை தேடும் நபரிடம் பணத்தையும் பெற்றுக்கொண்டு ஓடி விடுகிறார்கள். இது போன்ற சம்பவங்கள் தினந்தோறும் நடைபெற்று தான் வருகிறது. மோசடி கும்பலிடம் ஏமாந்தவர்கள் இது குறித்து காவல்துறையிடம் புகாரளித்து உள்ளனர். இது போன்ற நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் நீதிமன்றங்களில் பணி வாங்கி தருகிறேன் என்று கூறும் நபர்களிடம் பணம் தந்து ஏமாற வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.

நவ.17 முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் அடைப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

நீதித்துறைகளில் ஆட்கள் சேர்ப்பு கல்வித்தகுதியில் அடிப்படையில் நடத்தப்படுகிறது. சில மோசடி நபர்கள் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு நிரந்தர பணி பெற்றுத் தருவதாக கூறி வேலை தேடுபவர்களிடம் இருந்து பெரும் தொகையை வசூலிப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே பொதுமக்கள், அரசு வேலை தேடுபவர்கள் இது போன்ற நபர்களை நம்பி ஏமாற வேண்டாம், மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வு துறைக்கு புகாரளிக்கலாம் என்று உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!